search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவையில் சிறுமி கற்பழிப்பு"

    புதுவையில் மேலும் ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர். அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்தி சென்று திருக்கனூர் பகுதியில் 8 பேர் கற்பழித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் புதுவையில் மேலும் ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஊழியர் குடியிருப்பு உள்ளது. இங்கு பெண் ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு 16 வயது மகள் இருக்கிறார். இவர் பள்ளியில் படித்து வந்தார்.

    இதே குடியிருப்பில் ஜிப்மர் காவலாளி ஒருவரும் வசித்து வந்தார். அவரது மகன் முகேஷ் (வயது 26). அவர் அந்த மாணவியிடம் பழகி வந்தார். அப்போது எல்லை மீறி நடந்து கொண்டார். இந்த வி‌ஷயம் மாணவியின் தாயாருக்கு தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவர் குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். அவர் இதுபற்றி விசாரித்ததில் மாணவி கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முகேசை கைது செய்தனர். அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புதுவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். #PondicherryGirlharassment
    திருக்கனூர்:

    புதுவை ரெட்டியார் பாளயத்தை சேர்ந்த 16 வயது சிறுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது பாட்டி வீடு விழுப்புரத்தில் உள்ளது. இவர் பாட்டி வீட்டுக்கு பஸ்சில் செல்லும் போது இவருக்கு வழுதாவூரை சேர்ந்த விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை திருக்கனூர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் செல்போனில் ஆபாச படமெடுத்து அடிக்கடி மிரட்டி அந்த சிறுமியிடம் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

    ஒருகட்டத்தில் திருக்கனூர் பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்த விக்கி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்கள் 7 பேருக்கு விருந்தாக்கினார். இதுகுறித்து அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் முறையிட்டனர். அவர்கள் தலையீட்டின் பேரில் இதன் மீது விசாரணை நடத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா நடவடிக்கை எடுக்கும்படி திருக்கனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் விக்கியுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தது அவரது நண்பர்களான கண்ணதாசன், முகிலன், சூர்யா, தேவா, கலை, மற்றொரு சூர்யா,அசோக் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்கள் 8 பேரையும் தேடிவந்தனர். நேற்று இரவு திருக்கனூர் பகுதியில் பதுங்கி இருந்த விக்கி, முகிலன், கண்ணதாசன்,தேவா,சூர்யா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள். #PondicherryGirlharassment
    புதுவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #PondicherryGirlharassment
    திருக்கனூர்:

    சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுபோல் புதுவையில் 17 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 8 பேர் கும்பல் கற்பழித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    புதுவை ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த சிறுமியின் பாட்டி வீடு விழுப்புரத்தில் உள்ளது.

    பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பஸ்சில் செல்லும் போது வழுதாவூரை சேர்ந்த விக்கி (வயது 21) என்ற வாலிபருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று அதுபோல் அந்த சிறுமி விழுப்புரத்துக்கு சென்ற போது, விக்கி ஆசை வார்த்தை கூறி திருக்கனூரில் உள்ள புதர் நிறைந்த காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த சிறுமிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

    குளிர்பானத்தை குடித்ததும் அந்த சிறுமி மயங்கி போனார். இதனை பயன்படுத்தி கொண்ட விக்கி அந்த சிறுமியை கற்பழித்தார். மேலும் தனது நண்பர்கள் 7 பேருக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கினார் .

    மயக்கம் தெளிந்து விக்கி மற்றும் அவரது நண்பர்களால் சீரழிக்கப்பட்டதை உணர்ந்த அந்த சிறுமி இதுபற்றி புதுவை குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டார். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த புகாரை ஏற்று இதன் மீது விசாரணை நடத்தும்படி திருக்கனூர் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன்படி திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் விக்கியுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தவர்கள் திருக்கனூர் மற்றும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான கண்ணதாசன், முகிலன், சூர்யா, மற்றொரு சூர்யா, தேவா, ஜனா, அசோக் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அவர்கள் 8 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். #PondicherryGirlharassment
     
    ×